செய்திகள்
தற்கொலை

அரக்கோணம் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-07-08 15:40 IST   |   Update On 2019-07-08 15:40:00 IST
அரக்கோணம் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

அரக்கோணம் அடுத்த முருங்கை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களாகிறது. தம்பதி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த தமிழரசி சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News