செய்திகள்
வேலூர் இன்ஸ்பெக்டர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வேலூர் வணிகவியல் குற்ற புலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர்க்கு சொந்தமான இடங்களில் டி.எஸ்.பி. தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் வணிகவியல் குற்ற புலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜ். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த மாதம் 28-ந் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று ரமேஷ்ராஜ்கு சொந்தமான இடையன்சாத்து மண்டபம் சாலையில் உள்ள வீடு மற்றும் தெள்ளூர்பாளையத்தில் உள்ள வீடுகளில் டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையில் 2 குழுக்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் தவிர வேறு யாரும் உள்ளேயும் வெளியேயும் அனுமதிக்கபடவில்லை. வீட்டின் அறைகள் மற்றும் பீரோக்களில் இருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைபற்ற பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் வணிகவியல் குற்ற புலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜ். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த மாதம் 28-ந் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று ரமேஷ்ராஜ்கு சொந்தமான இடையன்சாத்து மண்டபம் சாலையில் உள்ள வீடு மற்றும் தெள்ளூர்பாளையத்தில் உள்ள வீடுகளில் டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையில் 2 குழுக்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் தவிர வேறு யாரும் உள்ளேயும் வெளியேயும் அனுமதிக்கபடவில்லை. வீட்டின் அறைகள் மற்றும் பீரோக்களில் இருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைபற்ற பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.