செய்திகள்

மானாமதுரையில் ரெயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு

Published On 2019-06-22 11:35 GMT   |   Update On 2019-06-22 11:35 GMT
மானாமதுரையில் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை:

நெல்லை மாவட்டம் பழையபேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவைச்சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர், கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

முன் பதிவில்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரெயில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையத்துக்கு இரவில் வந்தது. பிளாட்பாரத்தையொட்டி ரெயில் வந்த போது, படிக்கட்டில் அமர்ந்து வந்த முருகன், காலை எடுக்கவில்லை. இதனால் பிளாட்பாரத்தில் கால் தட்டியதில், முருகன் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.

பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மானாமதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News