செய்திகள்

நாகூரில் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது

Published On 2019-06-19 12:31 GMT   |   Update On 2019-06-19 12:31 GMT
நாகூரில் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை அடுத்த நாகூர் பெருமாள் மேல வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38) மெக்கானிக். இவருடைய மனைவி ரேணுகாதேவி. கடந்த 11-ம் தேதி ரேணுகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த நிலையில் ரேணுகா தேவி இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் செந்தில் குமாரை வீட்டில் இருந்து வெளியேற்றினர். நேற்று முன்தினம் இரவு கீழ மடவிளாகம் தெருவில் வசித்துவரும் ரேணுகா தேவியின் தாய்மாமன் தினேஷ்குமார் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் நான் இங்கு படுத்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு தினேஷ்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த செந்தில்குமார் நள்ளிரவில் தினேஷ்குமார் வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. 

இது குறித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ் பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News