செய்திகள்

நாகையில் கடல் சீற்றத்தில் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் தீவிரம்

Published On 2019-06-18 16:28 GMT   |   Update On 2019-06-18 16:28 GMT
நாகையில் கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் 2-வது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
நாகப்பட்டினம்:

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியது. இதனை கண்ட சக மீனவர்கள் படகின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மீனவர்கள் படகில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் பொருட்களை பைபர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் இன்றும் 2-வது நாளாக 20 படகுகளில் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலில் மூழ்கி சேதமடைந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகிற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நம்பியார் நகர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News