செய்திகள்

நாகையில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2019-06-13 20:17 IST   |   Update On 2019-06-13 20:17:00 IST
நாகையில் இன்று அதிகாலை தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்தன.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வ.உ.சி தெருவில் உள்ள ராவணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது வீட்டில் இருந்து பயங்கர சத்ததுடன் தீப்பிழம்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டின் சுவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.

மேலும் அருகில் உள்ள பரமு மற்றும் லட்சுமிஅம்மாள் ஆகியோரது வீட்டிற்கும் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் உள்ள அனைத்து பொருட்களும் , ஒரு இருசக்கர வாகனமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. 

தகவலறிந்து 2 வாகனங்களில் வந்த  தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News