செய்திகள்

நாகை மாவட்டத்தில் புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2019-06-11 15:43 GMT   |   Update On 2019-06-11 15:43 GMT
நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தில் மணல் காற்று வீசியதால் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி, பூவைத்தேடி, காமேஸ்வரம், புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு, ஆகிய கடலோர பகுதிகளில் காலை முதல் புழுதி காற்று வீசுகிறது.

இதனால் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தில் மணல் காற்று வீசி வருவதால் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்படுகின்றனர் இதனால் முகத்தில் துணியை கட்டி செல்கின்றனர்.

மேலும் மணல் வந்து வீடு முழுவதும் படர்ந்துள்ளது. வீட்டின் கூரைகள் சேதமடைகிறது எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News