செய்திகள்

பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2019-06-08 18:17 GMT   |   Update On 2019-06-08 18:17 GMT
ஜெயங்கொண்டம் அருகே பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் தலைமையில், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தா.பழூர் ஊராட்சி செயலர் இளங்கோவன், அணைக்குடம் ஊராட்சி செயலர் சகாதேவன், காரைக்குறிச்சி ஊராட்சி செயலர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், வட்டார சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தா.பழூர் கடைவீதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு மொத்தம் 1,500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அந்த கடைகளின் உரிமை யாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News