செய்திகள்
தருமபுரி அருகே சிறுவன் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி
தருமபுரியை அடுத்த கொடுத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஜெயம்ரவி என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். மாதேஷ் வீட்டில் அவரது மகன் ஜெயம்ரவி வசித்து வந்தார். சம்பவத்தன்று மஞ்சுளாவின் உறவினர்கள் சிறுவன் மாதேசை கடத்தி சென்றுவிட்டனர்.
இது குறித்து மாதேஷ் கொடுத்த புகாரின்பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.