செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2019-05-28 17:13 GMT   |   Update On 2019-05-28 17:13 GMT
காவேரிப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவேரிபட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாலிக்பாஷா. இவரது மகன் அஷாருதீன் (வயது 20). தொழிலாளியான இவர் நேற்று இரவு காவேரிப்பட்டணத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் போகும் போது எதிரே ஜெகதீஷ் என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அஷாருதீன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அஷாருதீன், ஜெகதீஷ் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.  

பின்னர் மேல் சிகிச்சைக்காக அஷாருதீனை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக அஷாருதீன் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News