செய்திகள்

பெரம்பலூர் அருகே ‘எய்ட்ஸ்’ குறித்து விழிப்புணர்வு

Published On 2019-05-22 17:59 GMT   |   Update On 2019-05-22 17:59 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் பொது சுகாதாரதுறை சார்பில் ‘எய்ட்ஸ்’ குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் பொது சுகாதாரதுறை சார்பில் ‘எய்ட்ஸ்’ குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் சுந்தரம் தலைமை தாங்கினார். டாக்டர் பாரதிபிரியா முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் இலவச ரத்த பரிசோதனை நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு ரத்த பரிசோதனை செய்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் ‘எய்ட்ஸ்’ குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. முடிவில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் பழனிராஜா நன்றி கூறினார். 
Tags:    

Similar News