செய்திகள்

காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலி

Published On 2019-05-18 12:21 GMT   |   Update On 2019-05-18 12:21 GMT
காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் செல்லும்போது, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News