செய்திகள்
திருமங்கலம் பகுதியில் 21-ந்தேதி மின் நிறுத்தம்
திருமங்கலம் பகுதியில் வருகிற 21-ந்தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.
பேரையூர்:
தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே அந்த நேரத்தில் தே.கல்லுப்பட்டி, குன்னத்தூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை திருமங்கலம் மின் வினியோக செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.