செய்திகள்

சுவாமிமலை அருகே சிறுவன் மர்ம மரணம்

Published On 2019-05-13 10:02 GMT   |   Update On 2019-05-13 10:02 GMT
சுவாமிமலை அருகே சிறுவன் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

சுவாமிமலையை அடுத்த திம்மக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது42) கொத்தனார். இவரது மனைவி சுபஸ்ரீ (38) இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சுபஸ்ரீ அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி அறிந்த கார்த்தி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே அபிஷேக் நேற்று கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டான் அவனை மீட்டு உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அபிஷேக் உடலில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவன் இன்று காலை பரிதாபமாக இறந்தான்.

இதுப்பற்றிய புகாரின் பேரின் சுவாமிமலைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News