செய்திகள்

2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி- வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2019-05-11 11:59 GMT   |   Update On 2019-05-11 11:59 GMT
அஞ்செட்டி அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.

2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.

மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News