செய்திகள்

வேலூர் ஜெயிலில் நளினி, முருகன் சந்திப்பு

Published On 2019-05-11 09:16 GMT   |   Update On 2019-05-11 09:16 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை 9.10 மணி முதல் 10.10 மணி வரை சந்திப்பு நடந்தது. ஆயுதப்படை டி.எஸ்.பி. ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நளினி, முருகன் சந்திப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News