வந்தவாசி அருகே மரத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர் பலி
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் விக்னேஷ் (வயது 20). செங்கல்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் நரேஷ் (20) இருவரும் நேற்று இரவு தேசூரில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள விக்னேஷ் நரேஷ் இருவரும் பைக்கில் சென்றனர்.
விழா முடிந்ததும் நள்ளிரவு வீடு திரும்பினர். தெள்ளார் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட விக்னேஷ் பைக்கை இடதுபுறமாக திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பைக் சாலையோர பனை மரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நரேஷ் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.