செய்திகள்

அறந்தாங்கி அருகே ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2019-05-09 23:31 IST   |   Update On 2019-05-09 23:31:00 IST
அறந்தாங்கி அருகே ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சேகர் முன்னிலையில் நேற்று இரவு அறந்தாங்கி பகுதியில் உள்ள ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது குறித்து திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 230 கிலோ ஓட்டல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 
Tags:    

Similar News