செய்திகள்
அட்சய திருதியையொட்டி 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை
தமிழகம் முழுவதும் அட்சய திருதியையொட்டி 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். #AkshayaTritiya
சென்னை:
அட்சய திருதியையொட்டி நேற்று முன்தினம் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் அதிகாலை முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. நேற்று அதிகாலை 3 மணி வரை அட்சய திருதியை விற்பனை நடந்தது. மக்களும் ஆர்வத்துடன் நகைகள் வாங்கி சென்றனர்.
இந்த ஆண்டு அட்சய திருதியையொட்டி தங்க நகைகள் வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகைகளுக்கான முன்பதிவு 40 சதவீதம் வரை அதிகரித்தது. நேற்று அதிகாலை வரையிலான 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. அதேபோல வெள்ளி பொருட்கள் விற்பனையும் வழக்கமான நாட்களை காட்டிலும் 5 மடங்கு உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #AkshayaTritiya
அட்சய திருதியையொட்டி நேற்று முன்தினம் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் அதிகாலை முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. நேற்று அதிகாலை 3 மணி வரை அட்சய திருதியை விற்பனை நடந்தது. மக்களும் ஆர்வத்துடன் நகைகள் வாங்கி சென்றனர்.
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:-
இந்த ஆண்டு அட்சய திருதியையொட்டி தங்க நகைகள் வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகைகளுக்கான முன்பதிவு 40 சதவீதம் வரை அதிகரித்தது. நேற்று அதிகாலை வரையிலான 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. அதேபோல வெள்ளி பொருட்கள் விற்பனையும் வழக்கமான நாட்களை காட்டிலும் 5 மடங்கு உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #AkshayaTritiya