செய்திகள்

திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

Published On 2019-05-08 09:58 GMT   |   Update On 2019-05-08 09:58 GMT
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே வங்கமானூத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 70). அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று 10 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அழுது கொண்டே சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் சேகரிடம் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜேம்சை போகசோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News