மடிப்பாக்கம்-மேடவாக்கத்தில் 3 கோவில்களில் உண்டியல் உடைப்பு
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் - மூவரசன் பேட்டை மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம ஆசாமிகள் நேற்று உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இந்த கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா வயரை துண்டித்து விட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது.
இதன் பின்புறம் வல்ல விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள பாதாள விநாயகர் கோவிலில் நேற்று இரவு உண்டியலை உடைத்து கொள்ளயடிக்க முயற்சி நடந்தது. அப்போது, அபாயமணி ஒலித்தது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.