செய்திகள்

கறம்பக்குடி அருகே விவசாயி தற்கொலை

Published On 2019-05-01 17:31 IST   |   Update On 2019-05-01 17:31:00 IST
கறம்பக்குடி அருகே பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பந்தர்வக் கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 64), விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரைத்தேடி சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவிலில் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். இது குறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News