செய்திகள்

தோல்வி பயத்தால் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சி - தங்க தமிழ்செல்வன்

Published On 2019-04-28 11:52 GMT   |   Update On 2019-04-28 11:52 GMT
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தோல்வி பயத்தால் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #ThangaTamilSelvan
சென்னை:

நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல வருகிற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்.

அதனால்தான் ஆட்சியை தக்க வைப்பதற்காக குறுக்கு வழியில் முயல்கின்றனர். அதற்கு சபாநாயகர் துணை போகிறார்.



நோட்டீசு அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச் செல்வன், இருவரும் இதற்கு முன்பு அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்தனர். சசிகலா தலைமையில் ஒரு அணியாக செயல்படுவதற்கு 20 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் கையெழுத்து போட்டு கொடுத்ததில் இவர்கள் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் இரு எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர். இப்போது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அ.ம.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். எனவே இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது சபாநாயகர் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது.அதையும் மீறி தகுதிநீக்கம் செய்தால் 6 மாதத்தில் தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan
Tags:    

Similar News