செய்திகள்

நெற்குன்றத்தில் பைக்ரேசில் மோதல் - பெண் உள்பட 3 பேருக்கு வெட்டு

Published On 2019-04-28 10:22 GMT   |   Update On 2019-04-28 10:22 GMT
நெற்குன்றத்தில் பைக்ரேசில் மோதலில் பெண் உள்பட 3 பேருக்கு அரிவாளால் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

போரூர்:

நெற்குன்றம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜாவீத். இவர் இரவு நண்பர் லோகேஷ் உடன் அதே பகுதி முனியப்பா நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் அரிவாள், கத்தி, கம்பியால் ஜாவீத், லோகேஷ் ஆகிய இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்த சுந்தரி என்ற பெண்ணையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதில் சுந்தரிக்கும் லேசான வெட்டு விழுந்தது. தலையில் வெட்டுபட்ட ஜாவீத் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லோகேஷ், சுந்தரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ், ராஜூ ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் அதேபகுதி தனலட்சுமி நகர், அன்னம்மாள் நகர் பகுதி வாலிபர்கள் இடையே தெருக்களுக்குள் பைக் ரேஸ் செல்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திஉள்ளனர். இதுதொடர்பாக நெற்குன்றம் அன்னம்மாள் நகரைச் சேர்ந்த அருண், அய்யனார், மோகன், சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News