செய்திகள்
வேளாங்கண்ணியில் கோவை கூலித்தொழிலாளி தற்கொலை
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கோவை கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதி மாசாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ம் தேதி மாலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது பேராலயம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மாரிமுத்து விஷம் குடித்த இடத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கடன் தொல்லை காரணமாகதான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.