செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியவர் கைது
வேலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தெற்கு போலீசார் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தினர்.
விசாரணையில், அவர் வேலூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 27) என்பதும், வாகனத்தின் சைலன்சரை அதிக சத்தம் வரும் வகையில் மாற்றி அமைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.