செய்திகள்

மும்பை கொலை வழக்கு: போச்சம்பள்ளியில் பதுங்கி இருந்த 3 பேர் கைது

Published On 2019-04-25 15:57 GMT   |   Update On 2019-04-25 15:57 GMT
மும்பையில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் 3 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். போச்சம்பள்ளியில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றனர்.
போச்சம்பள்ளி:

மும்பையில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் 3 பேர் கொண்ட கும்பலை மும்பை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
குற்றவாளிகள் மும்பையில் இருந்து தப்பி சென்ற விவரங்களை சேகரித்து வந்தனர். அந்த கொலை கும்பல் பெங்களூரு, வேலூர் ஆம்புர், திருப்பத்தூர் வழியாக போச்சம்பள்ளி அருகில் உள்ள பட்டகப்பட்டி கிராமத்துக்கு சென்றிருப்பதும், அங்கு அவர்களது நண்பர் மணி வீட்டில் தங்கி இருப்பதும் தனிப்படைக்கு தெரியவந்தது.

இதையடுத்து மும்பை தனிப்படை போலீசார் அவர்களை பட்டகப்பட்டி கிராமத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்பு போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கு 3 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், கேர்பட்டா கிராமத்தை சேர்ந்த அணில்குமார் (வயது 27), சந்திரகவுடா (30), கிரண்குமார் (28) என்பது தெரியவந்தது. 

மேலும் பட்டகப்பட்டி மணிக்கும் இந்த கும்பலுக்கும் இதற்கு முன்பு கர்நாடகாவில் கூலி வேலை செய்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்து காரில் மும்பைக்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News