செய்திகள்

திருமங்கலத்தில் தோட்ட தொழிலாளி கொடூரக் கொலை- வாலிபர் கைது

Published On 2019-04-25 12:05 GMT   |   Update On 2019-04-25 12:05 GMT
தோட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்:

திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வெள்ளிராஜன் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்த குண்டாறு சக்திவேல் (35) என்பவர் தோட்டத்துக்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த ஆடுகளை திருட முயன்றார். இதை பார்த்த வெள்ளிராஜன் அவரை தடுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த குண்டாறு சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளிராஜனை சரமாரியாக குத்தியும், தாக்கியும் அங்கிருந்து தப்பினார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெள்ளிராஜனை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் பதுங்கி இருந்த கொலையாளி குண்டாறு சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News