செய்திகள்

செய்துங்கநல்லூர் அருகே வேன் - மோட்டார் சைக்கிள் மோதி இளம்பெண் பலி

Published On 2019-04-23 11:18 GMT   |   Update On 2019-04-23 11:18 GMT
செய்துங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்துங்கநல்லூர்:

நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர் தனது மனைவின் தங்கையான மேகலா (18) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரியில் இருந்து சாம்பவர் வடகரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் வந்த போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து அம்பை வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் உள்ளிட்ட போலீசார் படுகாயமடைந்த மதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வேன் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 1 மாதத்தில் சுமார் 3 விபத்து நடந்துள்ளது. எனவே இவ்விடத்தில் பயணிகள் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News