செய்திகள்

கோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை

Published On 2019-04-22 17:25 GMT   |   Update On 2019-04-22 17:25 GMT
கோவையில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

மேற்கு வங்காள மாநிலம் பீர்பாரா பகுதியை சேர்ந்தவர் சூரன் மார்க்ஸ் (23). கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தங்கி அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊராக மேற்கு வங்காளத்திற்கு சென்ற சூரன் மார்க்ஸ் கடந்த 19-ந் தேதி அங்கிருந்து எர்ணாகுளம் புறப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இன்று காலை எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மரத்தில் பெல்டால் தூக்கில் தொங்கிய நிலையில் சூரன் மார்க்ஸ் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கே.ஜி. சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பிணமாக கிடந்த சூரன் மார்க்ஸ் உடலை சோதனை செய்த போது அவரது தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்தது. அவரது கழுத்து பெல்டால் இறுக்கப்பட்டு இருந்தது. அவரை யாரோ கொலை செய்து பிணத்தை பெல்டால் கட்டி மரத்தில் தொங்க விட்டு சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News