செய்திகள்

அரூர் அருகே இளம்பெண் தற்கொலை- ஆர்டிஓ விசாரணை

Published On 2019-04-19 16:48 GMT   |   Update On 2019-04-19 16:48 GMT
அரூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த புதுகொக்க ராப்பட்டி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சித்ரா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சித்ரா பூச்சி மருந்தை குடித்து விட்டார். அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

அவர் என்ன காரணத்துக்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து கோபிநாதம் பட்டி கூட்ரோடு இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 5 வருடத்துக்குள் சித்ரா இறந்து போனதால் வரதட்சணை கொடுமை காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். 
Tags:    

Similar News