செய்திகள்
நாசரேத்தில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் - 2 பேர் கைது
நாசரேத்தில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத்- வகுத்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சிவக்குமார் (வயது30) இவர் நாசரேத் மர்காஷிஸ் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத் தன்று இரவு இவரது கடைக்கு செம்பூரை சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் (31), தங்கராஜ் மகன் பாலமுருகன் (29) ஆகிய 2 பேர் சென்று சிவக்குமாரிடம் கடனுக்கு 5 புரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் அவர் புரோட்டா தீர்ந்துவிட்டது என கூறியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த விக்னேஷ், பாலமுருகன் ஆகியோர் சிவக்குமாரை அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிவக்குமார் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் தயாளந்த் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி விசாரணை நடத்தி விக்னேஷ், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.