செய்திகள்
நாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது 23). இவர் மீது நாகை மற்றும் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரைத்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் கொடுத்தனர்.