செய்திகள்

சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலி

Published On 2019-04-12 14:59 IST   |   Update On 2019-04-12 14:59:00 IST
சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் நம்பியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது62). விவசாயி. இவர் நேற்று சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் இரும்பறை ரோட்டில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகம் வந்தபோது அந்த வழியே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுமேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News