செய்திகள்

ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

Published On 2019-04-08 17:08 IST   |   Update On 2019-04-08 17:08:00 IST
ராணிப்பேட்டை அருகே 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் 8 வயது சிறுமி லாலாபேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் ராமன் (69) முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நடந்தவற்றை சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் ராமனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News