செய்திகள்

வெள்ளகோவிலில் இன்று ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2019-04-06 12:01 GMT   |   Update On 2019-04-06 12:01 GMT
வெள்ளகோவிலில் இன்று பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மனோன்மணி (73). ஓய்வு பெற்ற ஆசிரியை.

இவர் இன்று காலை 9.30 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். அங்கு முருங்கை காய் பறித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென மனோன்மணி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மனோன்மணி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் வெள்ளகோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News