செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் தகராறு: சீர்காழி நகர தே.மு.தி.க. செயலாளர் கைது

Published On 2019-04-03 18:43 IST   |   Update On 2019-04-03 18:43:00 IST
ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் நகர செயலாளரை தாக்கிய சீர்காழி நகர தேமுதிக. செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:

சீர்காழி ரெயிலடி தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது40). தே.மு.தி.க. நகர செயலாளராக உள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு இன்று மாலை பிரேமலதா விஜயகாந்த மயிலாடுதுறை பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். 

இதன் தொடர்பாக நேற்று மாலை சீர்காழியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இது குறித்து மாவட்ட செயலாளர் கேட்டபோது முறையான எந்த தகவலும் கூறாமல் தாமதம் பற்றி எப்படி கேட்கலாம் என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்த சீர்காழி கோவிந்தராஜ் நகரை சேர்ந்த மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சேகர்(48), வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்திலை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நகர செயலாளர் செந்தில், சேகரை தாக்கியுள்ளார்.

இது குறித்து சீர்காழி போலீசில் சேகர் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகர செயலாளர் செந்திலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News