செய்திகள்

வேலுரில் 106 டிகிரி வெயில் மக்கள் பரிதவிப்பு

Published On 2019-04-01 12:05 GMT   |   Update On 2019-04-01 12:05 GMT
வேலுர் மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 6-ந் தேதி 105 டிகிரி, 29-ந் தேதி 104 டிகிரி வெயில் என அதிக பட்சமாக, இருந்தது. நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால், சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பலரும் நிழலைத்தேடி தஞ்சமடைந்தனர். கொளுத்திய வெயிலால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 13 நாட்கள் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அளவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, நேற்றைய தினம் 106 டிகிரி பதிவானதே அதிகபட்சம் ஆகும். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.

Tags:    

Similar News