செய்திகள்
அரக்கோணம் அருகே கல்லூரி மாணவி மாயம்
அரக்கோணம் அருகே கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கோலம்:
அரக்கோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அரக்கோணத்தில் இருந்து ரெயில் மூலம் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், மாணவியின் நண்பர்கள் உள்ளிட்டோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவி எப்படி மாயமானார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அரக்கோணத்தில் இருந்து ரெயில் மூலம் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், மாணவியின் நண்பர்கள் உள்ளிட்டோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவி எப்படி மாயமானார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.