செய்திகள்

காட்பாடியில் ரெயில்வே போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

Published On 2019-04-01 16:27 IST   |   Update On 2019-04-01 16:27:00 IST
காட்பாடியில் ரெயில்வே போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கி‌ஷண்குமார் (வயது 35). இவர், ரெயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீடு திரும்பிய இவர், மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கேட்டபோது எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு திடீரென வீட்டில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். நாற்காலி விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த குடும்பத்தினர், கி‌ஷண்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, கி‌ஷண்குமார் தற்கொலை முயற்சிக்கு குடும்ப பிரச்சனை காரணமா அல்லது பணிச்சுமையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News