செய்திகள்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி

Published On 2019-03-30 10:18 GMT   |   Update On 2019-03-30 10:18 GMT
திருமங்கலம் அருகே இன்று அதிகாலை கார் கவிழ்ந்த விபத்தில் பெண்பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்:

கன்னியாகுமரி மாவட் டம், தேவாளை காட்டுப் புதூரைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி இன்பம் (வயது 52). இவர் தனது உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டார்.

காரை டிரைவர் ராஜ முகேஷ் (26) ஓட்டி வந்தார். கார் இன்று அதிகாலை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இன்பம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். மற்ற 9 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜமுகேஷ், அரசு (29), வசந்தா (26), ரேவதி (24) ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News