செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே விபத்து- புதுவை வாலிபர் பலி

Published On 2019-03-30 15:07 IST   |   Update On 2019-03-30 15:07:00 IST
கள்ளக்குறிச்சி அருகே இன்று காலை சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுவையைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:

புதுவை பாகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25), இவரது நண்பர்கள் பாபு (வயது 25), சங்கர் (வயது 27) இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று சேலம் ஏற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உலககாத்தான் பகுதியில் செல்லும் போது அங்கிருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தினேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். பாபு, சங்கர் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்து கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News