செய்திகள்

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

Published On 2019-03-29 15:02 GMT   |   Update On 2019-03-29 15:02 GMT
கறம்பக்குடி அருகே லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (வயது 35).இவரது மனைவி சூரியகலா (27). இந்த தம்பதிக்கு 2 குழந் தைகள் உள்ளனர். பாலகுரு சிங்கப்பூரில் வேலை பார்த்து பார்த்து விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் பாலகுருவும் அவரது மனைவி சூரியகலாவும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.  

கறம்பக்குடி அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் பாலகுரு, சூரியகலா படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சூரியகலா பரிதாபமாக  இறந்தார். பாலகுரு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News