செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் பலி

Published On 2019-03-26 08:12 GMT   |   Update On 2019-03-26 08:14 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PoisonousGas #ToxicGas
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருமாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.

இன்று காலை அவர் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த லாரியை வரவழைத்து இருந்தார். தொழிலாளிகள் பாதி அளவு கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியை எடுத்துச் சென்றனர்.

எவ்வளவு கழிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பதற்காக கிருஷ்ண மூர்த்தி தொட்டியை எட்டிப் பார்த்தார். அப்போது அவர் மீது வி‌ஷவாயு தாக்கியது. மயக்கம் அடைந்த அவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை கண்ட அவரது 2 மகன்களும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசித்த 3 ஆண்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்களையும் மீட்க முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி பலியானார்கள்.

அடுத்தடுத்து 6 பேர் வி‌ஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas #ToxicGas
Tags:    

Similar News