செய்திகள்

தொண்டி அருகே வாலிபர் குத்திக்கொலை- லாரி டிரைவர் கைது

Published On 2019-03-25 13:31 GMT   |   Update On 2019-03-25 13:31 GMT
தொண்டி அருகே தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி:

தொண்டி அருகே உள்ள தெற்கு ஊரணங்குடியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் ராமு (வயது32). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உப்பூருக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் நின்றிருந்தபோது 2 லாரி டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ராமு அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெய்வேலி வடக்கு மேலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்குமார் (45) என்பவர் ராமுவை அடித்ததாக தெரிகிறது. மேலும் லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராமுவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராமு பலியானார்.

இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News