செய்திகள்
ஆலங்குளத்தில் வாலிபருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளிக்கு வலைவீச்சு
ஆலங்குளத்தில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் ஐசக்ராஜன் (வயது27). சம்பவத்தன்று இவருக்கும், சியோன் நகரை சேர்ந்த தொழிலாளி இமானு வேல்ராஜன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இமானுவேல்ராஜன், ஐசக் ராஜனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுபற்றி ஐசக்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.