செய்திகள்

தேனி அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-03-21 12:42 GMT   |   Update On 2019-03-21 12:42 GMT
தேனி அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி:

தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன் கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் மகள் மோனிகா (வயது 16). தந்தை இறந்து விட்டதால் தாய் லெட்சுமியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மோனிகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். கிடைக்க வில்லை.

மோனிகாவின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் குமரேசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோனிகாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News