செய்திகள்
கறம்பக்குடி அருகே மரத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவன் பலி
கறம்பக்குடி அருகே புளியமரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆலங்குடி:
கறம்பக்குடி அருகே தீத்தானிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சூர்யா (வயது 16). இவர் மழையூர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தனது வீட்டில் அருகில் உள்ள புளியமரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மழையூர் காவல் சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மாணவன் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.