செய்திகள்

கொல்லங்கோடு அருகே வீட்டின் மாடி வழியாக புகுந்து பணம் கொள்ளை

Published On 2019-03-18 12:11 GMT   |   Update On 2019-03-18 12:11 GMT
கொல்லங்கோடு அருகே வீட்டின் மாடி வழியாக புகுந்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கொல்லங்கோடு மிக்கேல் புரம் சுனாமி காலணியை சேர்ந்தவர் ஆன்றோ. இவரது மனைவி புனிதா மேரி (வயது 41) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றிருந்தனர். பின்னர் ஆலயத்தில் இருந்து அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டினுள் சென்றபோது, வீட்டில் அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சோனியா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ் லாஸ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர். அதில் கொள்ளையர்கள் வீட்டின் மேல்மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வீட்டினுள் வந்தது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் அங்கிருந்த அலமாரியை உடைத்து அதில் இருந்த ரூ.37 ஆயிரம் பணம், மற்றும் மேஜையில் இருந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல் மற்றும் அலமாரி பகுதியில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News