செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடை - மாணவர்கள் பாதிப்பு

Published On 2019-03-16 10:15 GMT   |   Update On 2019-03-16 10:15 GMT
ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடையால் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முக்கிய வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

நகர் பகுதியில் இரவு நேரங்களில் முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் தங்கள் பணிகளை செய்ய முடியாமலும், ஓய்வு எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுபற்றி மாயவன் கூறுகையில், இரவு நேர மின் தடையால் தற்பொழுது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மின் தடையால் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி மின் வாரியத்திடம் புகார் கூறினால் நகர் பகுதிகளில் மின் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மின் தடை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றனர்.

இந்த மின்தடையை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படாத மின் தடையை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News